ஆப்நகரம்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி: நிர்மலா முக்கிய தகவல்!

கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு கூட்டு முயற்சிகள் தேவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Dec 2021, 3:49 pm
தற்போது நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சிகள் குறித்த மசோதா அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சிகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் குறித்து அரசு கவலை கொண்டுள்ளதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய என்ன வழிமுறைகள் உள்ளன என்பதைக் கண்காணிக்க விளம்பர கண்காணிப்பாளர்களின் வழிகாட்டுதல்களின்படி அரசு சரிபார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Samayam Tamil crypto


டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “தொழில்நுட்பமானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. மேலும் மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயங்கும் கட்டண முறைகளை திறம்பட கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் ஆல் பெஸ்ட் ஐசிஓ காயின்!
கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின்போது மேலும் பேசிய அவர், “தொழில்நுட்பத்திற்கு எல்லைகளைத் தாண்டி செயல்படும் ஆற்றல் உள்ளதால்தான் நான் அவற்றை ஒழுங்குபடுத்த உலகளாவிய கண்காணிப்பு தேவை எனக் கூறுகிறேன். கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்தும் முறை மற்றும் அதன் விரைவான இயக்கங்களைக் கண்காணிக்க அரசுக்கு ஒரு சிறந்த உலகளாவிய வழிமுறைகள் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது” என பதிலளித்தார்.

முன்மொழியப்பட்ட கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்