ஆப்நகரம்

கிரிப்டோ தடைக்கு சப்பைக் கட்டு கட்டும் அரசு!! காண்டான பைனான்ஸ் CEO!!

சாதாரண காரணங்களுக்காக கிரிப்டோ பரிவர்த்தனைகளை தவிர்ப்பது என்பது கிரிப்டோவிற்கு பயங்கரமானதாக இருக்கும் என ட்விட் பைனான்ஸ் சிஇஓ செங்பெங் சாவோ (Chengpeng Zhao) செய்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2022, 1:06 pm
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் – ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் பதற்றங்கள் காரணமாக உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் கிரிப்டோ பரிவர்த்தனைகளை கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும் என உத்தவிட்டது.
Samayam Tamil Crypto


அதுமட்டுமின்றி கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளங்களையும் கண்காணித்து வந்தன. அதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் கிரிப்டோ பரிமாற்றத் தளமாக குனா (Kuna) பைனான்ஸ் கிரிப்டோ தளம் ரஷ்யாவிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக குற்றம் சாட்டியது.

தடையை தாண்டி ரஷ்யாவின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்ற கருத்திற்கு எதிராக போராடி செங்பெங் சாவோ பெரும் உதவியை கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்களுக்கு செய்தார்.

அதனை அடுத்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ பரிமாற்றங்களை சாதாரண காரணங்களுக்காக தடுப்பது என்பது முடியாத ஒன்று என்றும் கிரிப்டோவில் பணப்பரிவர்த்தனைகள் என்பது எந்தத் தடயமும் இன்றி நடக்கும் என ட்விட் செய்துள்ளார்.


அதே சமயம் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஃபூகெட் டூரிஸ்ட் அசோசியேஷன் (பி.டி.ஏ) (Phuket Tourist Association) மற்றும் தாய்லாந்து வங்கி (பிஓடி) ஆகியவை ரஷ்யாவிலிருந்து கிரிப்டோ கொடுப்பனவுகளை ஏற்க பரிசீலித்து வருகின்றன எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்