ஆப்நகரம்

கிரிப்டோ கரன்சி ஆபத்தானது.. பகீர் கிளப்பிய ரிசர்வ் வங்கி ஆளுநர்!

கிரிப்டோ கரன்சிகள் ஒரு தெளிவான ஆபத்து என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Jul 2022, 1:51 pm
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழன் அன்று கிரிப்டோ கரன்சிகளை "தெளிவான ஆபத்து" என்று அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் மதிப்பைப் பெறுவது எல்லாம் ஒரு அதிநவீன பெயரில் சொல்லப்போனால் அது ஒரு ஊகம் என்றும் கூறியுள்ளார்.
Samayam Tamil crypto rbi


பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கிரிப்டோ கரன்சி உள்ளீடுகளைச் சேகரித்த பிறகு, கிரிப்டோ கரன்சிகள் குறித்த ஆலோசனைகளை உறுதி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த சமயத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் இப்படிக் கூறியிருப்பது கிரிப்டோ நிறுவனங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிகள் குறித்த கவலைகளை வெளிப்படையாகக் கடந்த பல ஆண்டுகளாகவே அறிவித்து வருகிறது. மேலும் மத்திய வங்கியின் பார்வையில் கிரிப்டோ கரன்சிகள் அதிக ஊகச் சொத்தாகக் கருதப்படுகின்றன.

பட்டையைக் கிளப்பும் டோஜ்காயின்.. படுத்தே விட்டது பிட்காயின்!!
கடந்த ஜூன் 30 அன்று வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையின் (FSR) 25வது இதழின் முன்னுரையில், நிதி அமைப்பு வளர்ந்து வரும் இந்நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், இணைய அபாயங்கள் அதிகரித்து வருகின்றன; எனவே அதில் மேலும் சிறப்புக் கவனம் தேவை என்றும் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ”கிரிப்டோகரன்சிகள் மூலம் ஏற்பட்டும் ஆழமான ஆபத்துக்கள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரிப்டோகரன்சிகள் ஒரு தெளிவான ஆபத்து. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் மதிப்பைப் பெறுவது எதுவாக இருந்தாலும், அது ஒரு அதிநவீன பெயரில் வெறும் ஊகமாகும்" என்று சக்திகாந்த தாஸ் கறாராகக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்