ஆப்நகரம்

இவங்களுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. பைனான்ஸ் கம்பெனியில் கைவரிசைக் காட்டிய ஹேக்கர்ஸ்!

கிரிப்போகரன்சி மூலமாக கடன் வழங்கும் Euler நிறுவனத்திடமிருந்து கிரிப்டோ ஹேக்கர்கள் 197 மில்லியன் டாலர்களை திருடியுள்ளனர்.

Samayam Tamil 14 Mar 2023, 2:54 pm
கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளும் அது தொடர்பான ஆர்வமமும் மக்களிடையே ஒருபுறம் அதிகரித்துவந்தாலும் ஹேக் மற்றும் மோசடி சம்பவங்கள் முதலீட்டாளர்களை பீதியடையச் செய்கின்றன.
Samayam Tamil Crypto scam


நேற்று கிரிப்டோ கடன் வழங்கும் தளமான யூலர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் திருடியுள்ளனர். பிளாக்செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum மீதான பரிவர்த்தனைகளின் பரபரப்பில் Euler Finance லிருந்து சுமார் 197 மில்லியன் டாலர் இழந்துள்ளதை அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகளை அடமான வைத்தவர்கள் ட்விட்டரில் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இந்த ஹேக்கில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான ஹேக்கர்கள் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. நிறுவனம் தற்போது பாதுகாப்பு மற்றும் சட்ட வல்லுநர்களிடம் இணைந்து செய்லபட்டு வருகிறது.

சைபர் தாக்குதலின் செய்திக்குப் பிறகு ஆய்லரின் கிரிப்டோ டோக்கன் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு கிரிப்டோ ஹேக்குகளுடன் ஒப்பிடுகையில் இது பெரிய திருட்டாக கூறப்படுகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்