ஆப்நகரம்

கிரிப்டோ ஊழல்..உஷாரா இருங்க..எச்சரிக்கும் அதிகாரி..குபீரென சிரித்த எலான் மஸ்க்!

கிரிப்டோ கரன்சி பெயரில் நடைபெறும் 95% திட்டங்கள் ஊழல் நிறைந்தவை என டோஜ் காயினின் இணை நிறுவனர் கூறியுள்ளார்.

Samayam Tamil 21 May 2022, 3:10 pm
சமீப காலமாக கிரிப்டோ கரன்சி பெயரில் உருவாகி வரும் திட்டங்களில் 95% ஊழல் நிறைந்த திட்டங்களே என டோஜ் காயினின் இணை நிறுவனரான (co-founder) பில்லி மார்க்கஸ் (Billy Markus) கூறியுள்ளார். மேலும் அவற்றுக்கு "மோசடிக் குப்பைகள்” எனவும் பெயர் சூட்டியுள்ளார்.
Samayam Tamil Elon Musk



கிரிப்டோ தொழில் பற்றி மக்கள் கொண்டிருக்கும் பொதுவான கருத்தை மாற்றுமாறு அவரைப் பின்தொடர்பவர்களை மார்கள் வலியுறுத்தி வருகிறார். மார்க்கஸின் ட்வீட், கிரிப்டோகரன்சிகள் ஆரம்பத்திலிருந்தே மிகவும் மோசமான நற்பெயரைப் பெற்றுள்ளன.

குறிப்பாகப் பாரம்பரிய நிதி நிறுவனங்கள், சொத்து வகுப்பை விவரிக்க இழிவான சொற்களைப் பயன்படுத்துகின்றனர் எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

அவரின் இந்த ட்விட்டுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், "தரையில் விழுந்து சிரிக்கும்" ஈமோஜியை பதிலாக வெளியிட்டுள்ளார். அதற்கு மார்க்கஸ் இது மிகவும் புத்திசாலித்தனமானது என்று பதில் ட்விட் செய்துள்ளார்.


சில பயனர்கள் DOGE இணை நிறுவனரின் கருத்துடன் உடன்பட்டாலும், மற்றவர்கள் மார்கஸுக்கு கிரிப்டோ குறித்த சுய விழிப்புணர்வு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏனெனில் அவர் Dogecoin இன இணை நிறுவனராக இருந்துள்ளார். டோஜ் காயின் (Dogecoin) "நையாண்டி" காக உருவாக்கப்பட்டது என்று கூறி மார்க்கஸ் தன்னைத் தற்காத்துக் கொண்டார் எனவும் பொதுவான குற்றச்சாட்டை அவர் மீது சில கிரிப்டோ ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்