ஆப்நகரம்

பிட்காயினுக்கு நான் கேரண்டி .. எலான் மஸ்க் அதிரடி கருத்து!!

பிட்காயின் நீண்ட நாள் முதலீடுகளுக்கு ஏற்றது அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 May 2022, 10:36 am
கடந்த சில நாட்களாகவே பிட்காயின் குறித்து காரசார கருத்துக்களைப் பல உலக புகழ்பெற்ற பணக்காரர்கள் அவர்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
Samayam Tamil crypto


அதிலும் குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை சின்னமாகவும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான வாரன் பஃபெட் இரண்டு நாட்களுக்கு முன்பு உலகில் உள்ள அனைத்து பிட்காயினையும் குறிப்பிட்ட விலைக்குக் கொடுத்தாலும் வாங்கப்போவதில்லை என ஒரு அவரின் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அதிரடியாகத் தெரிவித்தார்.

அதன்மூலம் அவர் கிரிப்டோகரன்சிகளின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனக் தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை தொடர்ந்து எலான் மஸ்க் அவருக்கு வயதாகி விட்டது அதனால் பிட்காயின் பற்றிய மதிப்பு தெரியாமல் இப்படிக் குப்பையில் போட்டு விட்டார் என அவரைக் கிண்டல் செய்து டிவிட் செய்தார்.

அதனைத் தொடர்ந்து எலான் மஸ்கின் நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் பிட்காயினை அந்நிறுவனம் நம்புவதாக டிவிட் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் பிட்காயின் நீண்டகால முதலீடுகளுக்கும் வருங்கால இளைய தலைமுறையினருக்கும் ஒரு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

அதுவரை சரிவில் இருந்த பிட்காயினின் மதிப்பானது இந்த டிவிட்டினை தொடர்ந்து 5% உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிப்டோ மார்க்கெட் சரிவில் இருக்கும் பொழுது எலான் மஸ்க் பயந்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய எலான் மஸ்க் அவர் இன்று வரையும் அவரிடம் உள்ள பிகாயின்களை எந்த நிலையிலும் விற்றதில்லை எனவும் அவற்றை இன்று வரை ஹோல்ட் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்