ஆப்நகரம்

அதிகரிக்கும் கிரிப்டோ மோசடிகள்: பின்வாங்கும் நாடுகள்!

2021ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,03,768 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்ய்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jan 2022, 7:33 pm
கிரிப்டோகரன்சி சம்பந்தப்பட்ட மோசடிகள் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டில் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல நாடுகளில் கிரிடோகரன்சி மைனிங்கிற்காக கிரிப்டோ மைனர்கள் மின்சாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளை உருவாக்கி வந்துள்ளனர். அதனால் அந்நாடுகளில் மின்சாரத் தட்டுப்பாடுகள் அதிகரித்து வந்துள்ளது.
Samayam Tamil கிரிப்டோ மோசடி


சமீபத்தில், கொசோவோ நாட்டில் சட்ட விரோதமாக பிட்காயின் மைனிங்கில் ஈடுபாடட்தால் அங்கு மின் தட்டுப்பாடுகள் அதிகரித்து அந்நாட்டு அரசு, 3 மாதங்களுக்கு அதிக அளவிலான மின்சாரத் தடை அந்நாட்டில் இருக்கும் எனக் கூறியுள்ளது. இந்த மின்சாராத் திருட்டைத் தொடர்ந்து கொசோவோ நாட்டில் கிரிப்டோகரன்சி மைனிங் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கு 6 மாத கால தடை விதித்துள்ளது.

ஒரே ஒரு ட்வீட்டில் உச்சம் தொட்ட டோஜ்காயின்!
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட உலக அளவில் 60 சதவீதத்தினர் சட்ட விரோதமாக கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டும், சைபர் கிரைம்கள் மூலமும் சுமார் 14 பில்லியன் டாலர் வரை (ரூ.1,03,768 கோடி) கிரிப்டோ மோசடிகள் மூலம் வருமானம் ஈட்டியதாக Chainalysis அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களால் பல நாடுகள் கிரிப்டோகரன்சியை தடை செய்ய முடிவு செய்துள்ளன. கிரிப்டோகரன்சி வளர்ச்சிக்கு சமமான வீழ்ச்சியையும் அடைந்து வருவது அதன் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்