ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை கட்டிப் போட்ட காயின்கள்!

தொடர்ச்சியான கிரிப்டோகரன்சி சந்தை சரிவால், பிட்காயின், எதிரியம் காயின்களைத் தவிர்த்து ஸ்டேபிள்காயின்கள் பக்கம் தங்களின் கவனத்தை இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்கள் திருப்பியுள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2022, 10:11 pm
கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தை அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றது. ஏனெனில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ள முதன்மைக் காயின்களில் இருந்து தங்களின் கிரிப்டோக்களை கலைத்து அவற்றை ஸ்டேபிள்காயின்களின் முதலீடு செய்து வருகின்றனர்.
Samayam Tamil Stablecoins


இவ்வாறு செய்வதால் அதிகப்படியான நஷ்டங்களை தவிர்த்து, முதலீட்டளர்களின் பணத்தை சீராக வைக்க முடியும் என நம்புகின்றனர். மேலும் பிட்காயின், எதிரியம், பைனான்ஸ் மற்றும் சொலானோ போன்ற முதன்மைக் காயின்களின் அதிகப்படியான விலையும் அதன் விலை வீழ்ச்சியும் முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.

அதனால் பெரும்பாலனா கிரிப்டோ முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீடுகளை சரியாக முதலீடு செய்து தங்களின் முதலீடுகளை பாதுகாக்க விரும்புவதால், விலைக் குறைவான ஸ்டேபிள்காயின்கள் (ஆல்ட்காயின்கள்) பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர்.

Cryptocurrency: வேகம் காட்டும் ஸ்கார் டோக்கன் - 600% உயர்வு!
இந்திய கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நீண்டகால அடிப்படையில் அதிக இலாபம் தரும் முதலீடுகளை விரும்புகின்றனர். அதனால் பிட்காயின் மற்றும் எதிரியம் போன்ற காயின்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, தற்போதுள்ள விலைச் சரிவை பயன்படுத்தி விலைக் குறைவான ஸ்டேபிள்காயினகளான டெதர் மற்றும் யூஎஸ்டி போன்ற அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்ட காயின்களில் அதிகம் முதலீடு செய்துள்ளனர் எனவும், கடந்த இரண்டு வாரங்களில் ஸ்டேபிள்காயின்களின் முதலீடு 15 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்