ஆப்நகரம்

இந்தியாவின் கிரிப்டோகரன்சி சட்டம் எப்படி இருக்கும்?

இந்தியாவின் கிரிப்டோ சட்டமானது உலகளாவிய கருத்துக்களின் ஒருமித்த கருத்துகளை கேட்டு அறிந்த பின்னரே அரசு உருவாக்கும் என ஆதாரம் கூறுகின்றது.

Samayam Tamil 2 Apr 2022, 9:19 am
கிரிப்டோகரன்சிகளுக்கான சட்டத்தை இந்தியா உருவாக்கும், ஆனால் அத்தகைய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் உலகளாவிய ஒருமித்த கருத்து வெளிப்பட்ட பின்னரே சட்டத்தை அரசு இயற்றும் என இந்த விஷயத்தை நன்கு அறிந்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.
Samayam Tamil crypto tax


தற்சமயம் வரை கிரிப்டோ மீதான விதிமுறைகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது கடுமையாக்கவோ அரசாங்கம் விரைவில் ஒரு சட்டத்தைத் திட்டமிடவில்லை எனவும், ஆனால் விவாதங்கள் தனிப்பட்டவை என்பதால் அவற்றை மறுபடியும் சரியாக கேட்க வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவருடன் உடனடியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என பத்திரிக்கை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது 30% வரியை அறிவித்துள்ளது.

கிரிப்டோ சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பே அதற்கான சட்டங்களை கொண்டு வர அரசு முயற்சித்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவை ஒத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் உலக பொருளாதார மன்றத்தில் பேசிய பிரதமர் மோடி கிரிப்டோகரன்சிகள் குறித்த உலகளாவிய சீரான அணுகுமுறை தேவை என்றும் ஒரு தேசத்தின் நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்