ஆப்நகரம்

இந்திய டிஜிட்டல் ரூபாய் – கட்டண சேவை ரொம்ப கம்மி!! எப்படி?

இந்திய மத்திய வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பின்னால் பெயர் தெரியாத தொழில்நுட்பம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Samayam Tamil 18 Apr 2022, 9:20 am
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கிரிப்டோவிற்கு 30% வரிவிதித்தும் அதற்கு எவ்வித வரிச் சலுகைகளும் இல்லை எனவும் அறிவித்தார்.
Samayam Tamil crypto


அதனைத் தொடர்ந்து அடுத்த நிதியாண்டுக்குள் மத்திய வங்கியானது டிஜிட்டல் கரன்சியை வெளியிடும்(Central Bank Digital Currency-CBDC) எனவும் அறிவித்தார். அதற்கு டிஜிட்டல் ரூபாய் (Digital Rupee) எனவும் பெயர் வைத்திருந்தனர்.

டிஜிட்டல் நாணயமானது பிளாக் செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு டிஜிட்டல் கரன்சியாகும். அதே சமயம் டிஜிட்டல் கரன்சியில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான பெயர் தெரியாத அம்சத்துடன் இது வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தாது, ஏனெனில் அவற்றின் பதிவுகள் லெட்ஜரில் வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பணம் அனுப்பப்படும் போது அதற்கான சேவைக் கட்டணங்கள் அந்த கரன்சியின் அளவைப் பொறுத்து இருக்கும்.

மேலும் இந்த குறைந்த மதிப்புள்ள பரிவத்தனைகளுக்கு உதவும் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கிடைத்த தகவல்கள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் வெளியாகுமானால் பல சிக்கல்கள் எழலாம் என்பதால் இந்த அறிப்படதா தொழிநுட்பம் குறித்து தகவல்கள் வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர் கூறுகையில் இந்த குறைந்த பரிவத்தனைகளுக்கான தொழிநுட்பம் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை எனவும் அதற்கு பெயர் இல்லை எனவும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஒரு ICRIER (Indian Council for Research on International Economic Relations) நிகழ்வில் பேசிய சங்கர், "அதாவது குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பெயர் தெரியாத நிலை உள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட பரிவத்தனை வரம்பிற்கு அப்பால் பெயர் தெரியாதவர்கள் இருக்க வேண்டியதில்லை" என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இந்த புதிய தொழில்நுட்பம் எப்படி செயல்படும் எனவும் அவை மத்திய வங்கியின் சட்டத்திற்குற்பட்டு செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ரபி சங்கர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்