ஆப்நகரம்

கிரிப்டோ கரன்சிகள் இல்லாமல் போய்விடும்! - ரகுராம் ராஜன் அதிரடி!

அனைத்து கிரிப்டோ கரன்சிகளுமே நீண்ட நாட்களுக்கு இருக்காது என்று ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2021, 12:30 pm
இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி கிரிப்டோ முதலீட்டாளர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குறிப்பிட்ட சில தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil crypto


இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் CNBC-TV18 ஊடகத்திடம் கிரிப்டோ கரன்சி குறித்த கேள்விக்கு ”குறிப்பிட்ட சில கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே தொடர்ந்து செயல்படும். அவற்றைத் தவிர்த்து மற்ற கரன்சிகள் அனைத்தும் உயிர்வாழ வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் துலிம் மேனியா பூக்களுக்கு ஏற்பட்ட அதிகப்படியான தேவை மற்றும் மக்களுக்கு அதன் மீதான மோகம் அதனை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய வழிவகுத்தது. பின்னாட்களில் அவற்றுக்கான மோகம் குறைந்து அவற்றை மக்கள் சாதாரணமாகக் கருதினர். அதே போலத்தான் கிரிப்டோ கரன்சியின் நிலையும் இப்போது இருப்பதாக ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிப்டோ கரன்சிக்கு தடையா? பயந்தா வாழ முடியுமா? ஆஸ்திரேலியா அதிரடி!

மக்கள் கிரிப்டோ கரன்சியை இரண்டு விதமாக பிரித்துப் பார்க்கின்றனர். ஒரு தரப்பினர் அதனை மதிப்புமிக்க நீண்டகால சொத்தாகப் பார்க்கின்றனர். இன்னொரு தரப்பினர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணம் செலுத்தும் ஒரு கருவியாக நினைக்கின்றனர் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிறந்த பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்