ஆப்நகரம்

அடேங்கப்பா!! பல லட்சங்களுக்கு ஏலம் போன நெல்சன் மண்டேலாவின் NFT!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் அசல் கைது வாரண்ட் NFTஆக வெளியிடப்பட்ட ஒரே நாளில் 1,30,000 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2022, 12:02 pm
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் அசல் கைது வாரண்ட் NFT ஆக வெளியிடப்பட்டது. அதில் தென்னாப்பிரிக்காவின் போராட்டத்தை ஆவணப்படுத்தும் பாரம்பரிய தளத்திற்கு நிதி உதவி செய்யும் விதமாக அவரின் கைது வாரண்ட் NFT ஆக வெளியிடப்பட்டது.
Samayam Tamil nelson mandelas original arrest warrant nft raises 99 lakh rupees in auction
அடேங்கப்பா!! பல லட்சங்களுக்கு ஏலம் போன நெல்சன் மண்டேலாவின் NFT!


நெல்சன் மண்டேலாவின் அசல் கைது வாரண்ட் NFT ஆக வெளியிடப்பட்ட ஒரே நாளில் 130,000 டாலருக்கு (தோராயமாக ரூ. 99 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது. NFTகளுக்கான சந்தையான மோமிண்ட் (Momint) இன் தலைமை நிர்வாக அதிகாரி போஸ்துமஸ் (Posthumus) இந்த ஏலம் குறித்து கூறுகையில், ஜனநாயகத்திற்காக மண்டேலா அவர்களின் படத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானமானது 2004ஆம் ஆண்டில் அவரின் அசல் கைது ஆவணத்தை நன்கொடையாகப் பெற்ற லில்லீஸ் லீஃப் (Liliesleaf ) மியூசியம் பாரம்பரிய தளத்திற்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

81 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் சிக்கிய இந்திய கிரிப்டோ நிறுவனங்கள்.. அரசு அதிர்ச்சி தகவல்!
மேலும், கோவிட் – 19 தொற்றினால் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததாலும் லில்லீஸ் லீஃப் மியூசியம் சரியான வருமானம் இல்லாததால் பராமரிப்பு செய்ய முடியாமல் திணறி வரும் நேரத்தில் இந்த ஏலத் தொகை அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும், பழமையை காக்கும் பாரம்பரிய மியூச்சியத்தை காப்பாற்றுவதற்கும் இந்த பணம் உதவியாக இருக்கும் என தென்னாப்பரிக்காவின் கால்பந்து வீரர் ஆஹ்ரென் (Ahren) ப்ளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்