ஆப்நகரம்

உலகின் முதல் டிஜிட்டல் கரன்சி எதுன்னு தெரியுமா? இப்போ அதுக்கு வயசு 1 ஆச்சு!!

மிகவும் சுவாரஸ்யமான தகவல்!

Samayam Tamil 3 May 2022, 1:03 pm
உலகின் முதல் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கிரிப்டோகரன்சி வந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அதன் தற்போதைய நிலையைப் பற்றி இங்கு காணலாம்.
Samayam Tamil one year of worlds first regulated digital currency
உலகின் முதல் டிஜிட்டல் கரன்சி எதுன்னு தெரியுமா? இப்போ அதுக்கு வயசு 1 ஆச்சு!!


கிரிப்டோ கரன்சியில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

ஒரு சிம்பிள் உதாரணமாக நீங்கள் 2012ஆம் ஆண்டில் ஒரு பிட்காயினை 100 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் இன்றைக்கு நீங்க ரூ.30,00,000 லட்சத்துக்குச் சொந்தக்காரர். ஆம் கிரிப்டோ மூலம் அதிக வருமானத்தை ஈட்டவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உலகில் உள்ள பல நாடுகளும் கிரிப்டோ கரன்சிகளை சட்டப்பூர்வமாக்குவதில் ஆர்வமாக இருந்து வருகின்றன. அதில் சில சிக்கல்கள் சந்தை அபாயங்கள் இருந்தாலும் அதன் வளர்ச்சியானது அதிவேகமாக இருப்பதால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதில் மக்கள் மட்டுமின்றி அரசும் ஆர்வமாக உள்ளது.

உலகின் முதல் டிஜிட்டல் கரன்சி!

ஹாங்காங் நகரின் அரசானது பிஎன்பி காயின் (PNP Coin) எனும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட முதல் டிஜிட்டல் கரன்சியை (CBDC) சென்ற ஆண்டு (2021) அறிமுகப்படுத்தியது. நாளடைவில் அந்தக் காயினை மிஷன் ஹிலியோஸ் (Mission Helios) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்தக்காயின்தான் உலகின் முதல் சட்டப்பூர்வமாக்கப்பட்ட டிஜிட்டல் கரன்சியாகும்.

ஏன் கிரிப்டோகரன்சிகளை அரசாங்கம் ஏற்க மறுக்கிறது?

கிரிப்டோகரன்சிகளை எந்தவொரு நாடும், வங்கியும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் டிஜிட்டல் கரன்சி அந்தந்த நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்களும் அது ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும். அதில் லாப நஷ்டங்களுக்கு அரசும் மத்திய வங்கியும் பொறுப்பேற்கும். அதே நீங்கள் தனியார் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியம் மற்ற ஆல்ட்காயின்களில் முதலீடு செய்து ஏற்படும் இழப்பிற்கு உங்களைத்தவிர யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

தற்போதைய நிலை என்ன?

ஹாங்காங்கின் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பிஎன்பி காயின் எனும் டிஜிட்டல் கரன்சியானது ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஏற்றத்துடனே காணப்படுகிறது. அந்நாட்டின் அரசே அதை ஏற்று நடத்துவதால் பல முதலீட்டாளர்கள் அதில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர். காயின் மார்க்கெட் கேப்பின் இன்றைய நிலவரப்படி முதல் டிஜிட்டல் கரன்சியின் மதிப்பானது 3.28% உயர்வுடன் 0.000000155 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்