ஆப்நகரம்

இனி இங்கு பிட்காயின் செல்லும்..தொழில்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

பிட்காயின் மூலம் பணம் செலுத்துவதை அனுமதி அளிப்பதாக ரஷ்யாவின் தொழில்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2022, 2:13 pm
ரஷ்யா விரைவில் கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக சட்டப்பூர்வமாக்கும் என அதன் தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Samayam Tamil WhatsApp Image 2022-05-20 at 2.04.18 PM.


ரஷ்யாவின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்துரோவ், ஒரு கல்வி நிகழ்வில் கலந்து கொண்டபோது அரசாங்கமும் மத்திய வங்கியும் கிரிப்டோகரன்சிகள் தொடர்பான நீண்டகால வேறுபாடுகளைத் தீர்க்க தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.

ரஷ்ய நாட்டில் கிரிப்டோகரன்சிகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற மத்திய வங்கியின் கோரிக்கைக்கு எதிராகப் பிப்ரவரி மாத தொடக்கத்தில் அந்நாட்டின் நிதி அமைச்சகம் ஒரு சட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து பிட்காயின் மூலம் பணம் செலுத்துவதை அதிகாரப்பூர்வமாக்குவதாகவும் அறிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் சமயங்களில் ரஷ்யாவின் அனைத்து கிரிப்டோ நடவடிக்கைகளையும் அனைத்து நாடுகளும் முடக்க வேண்டும் எனக் கூறியது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா பிட்காயின்கள் மூலம் அதன் நட்பு நாடுகள் கேஸ் மற்றும் எரிவாயுக்களை பிட்காயின் மூலம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS இன் அறிக்கையின்படி, பிட்காயின் அல்லது வேறு ஏதேனும் கிரிப்டோகரன்சியை ரஷ்யா சட்டப்பூர்வமாக்குமா இல்லையா என்று கேட்டபோது, "இது எப்போது நடக்கும், எப்படி நடக்கும், எப்படிக் கட்டுப்படுத்தப்படும் என்பதுதான் கேள்வி. இப்போது மத்திய வங்கியும் அரசாங்கமும் இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் மந்துரோவ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்