ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி மைனிங்க்கு ஓகே சொன்ன அரசு .. கிரிப்டோ மைனர்கள் ஹேப்பி நியூஸ்!!

ரஷ்ய மத்திய வங்கி அதன் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 11 Feb 2022, 2:48 pm
ரஷ்யாவில் கடந்த வருடம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் கிரிப்டோ மைனிங்கில் ஈடுபட அனுமதி அளித்தது. ரஷ்யாவில் கிரிப்டோ மைனிங் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு அதன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தது.
Samayam Tamil Image


ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதாம் ரஷ்யாவில் அதிகப்படியான மின்சாரா உபயோகத்தால் அதிக மின் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. மேலும் அதிகப்படியான மக்கள் சட்டத்திற்கு புரம்பாக கிரிப்டோ மைனிங்கிலும் ஈடுபட்டனர்.

அதனால் அதிபர் விளாடிமர் புடின் தலைமையிலான ரஷ்யா அரசுக்கு, ரஷ்ய மத்திய வங்கி உடனடியாக கிர்ப்டோ மைனிங் மற்றும் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் அழுத்தத்தால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஷ்யாவில் கிரிப்டோ மைனிங்கிற்கு இடைகாலத் தடை விதித்தது. அதன் பின் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு புடின் தலைமையிலான அரசு கிரிப்டோ மைனிங்கிற்கு அனுமதி வழங்கியது.

அதுவும் அரசு ஒதுக்கீடு செய்யும் மின்சார அளவின் படிதான் கிரிப்டோ மைனிங்கில் கிரிப்டோகரன்சிகளை கிரிப்டோ மைனர்கள் உருவாக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கிரிப்டோ மைனிங் மூலம் கிடைக்கும் வருமானம் முக்கியத்துவம் பெருவதால் அதை அனுமதிப்பதாகும் கூறினார்.
இதற்கிடையில் பிப்ரவரி 10 ஆம் தேதி கிரிப்டோகரன்சிகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது குறித்து ரஷ்ய அரசாங்கமும் ரஷ்யாவின் மத்திய வங்கியும் ஒரு உடன்பாட்டை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய செய்தித்தாள் கொமர்சன்ட் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகள் தற்சமயம் கிரிப்டோகரன்சிக்கென ஒரு வரைவுச் சட்டத்தைத் தயாரித்து வருகின்றனர், வரும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் அரசு கிரிப்டோவிற்கான சட்டத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்