ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி ரொம்ப டேஞ்சர்.. ரஷ்ய அதிபர் போட்ட குண்டு!

கிரிப்டோகரன்சிகளில் ஆபத்து அதிகம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை.

Samayam Tamil 2 Dec 2021, 7:54 pm
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற முதலீடு மாநாட்டில் கிரிப்டோகரன்சி மிகவும் ஆபத்தானது என ரஷ்ய அதிபர் விமர்சித்துள்ளார். ரஷ்ய அரசு மத்திய வங்கியின் உதவியுடன் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க பரிசீலித்து வரும் நிலையில் அதன் அதிபர் புதின் இவ்வாறு கூறியிருப்பது அந்நாடு மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Vladimir putin


மாஸ்கோ நகரில் நடைபெற்ற ரஷ்ய முதலீட்டு மாநாட்டில் பேசுகையில் விளாதிமிர் புதின், “அரசு கிரிப்டோகரன்சி சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்க குறைந்தபட்சம் எட்டு சட்டங்கள் மற்றும் ஐந்து குறியீடுகள் மாற்றப்பட வேண்டியுள்ளது. அதற்காக மத்திய வங்கியின் உதவியை அரசு நாடியுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. ஆகவே அவை மிகவும் ஆபத்தான ஒன்றாகவே கருதப்படுகிறது. கிரிப்டோகரன்சி அபாயங்களைப் பற்றி பேசுபவர்களின் கருத்துக்கும் அரசு செவிசாய்க்கும் எனவும் அவர் மேற்கோளிட்டு கூறியுள்ளார்.

கிரிப்டோகரன்சியை தடை செய்யாதீங்க.. அரசுக்கு வலியுறுத்தல்!
கிரிப்டோகரன்சியை முறையாக கண்காணிக்காப்படாவிட்டால், தேசிய கருவூலத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷ்யாவின் ஃபெடரல் டேக்‌சேஷன் சர்வீஸின் (Russian Federal Taxation Service) தலைவரான டானில் எக்ரோவ் (Danniil Egorov) கூறிய சில நாட்களுக்கு பிறகு புதினின் கிரிப்டோகரன்சி குறித்த கருத்து வந்துள்ளதும் கவனிக்கபட வேண்டிய ஒன்றாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்