ஆப்நகரம்

கிரிப்டோகரன்சியில் கால் பதிக்கும் சாம்சங் நிறுவனம்!

சாம்சங் தனது ஸ்மார்ட் டிவி மூலம் என்எஃப்டி (NFT) வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

Samayam Tamil 4 Jan 2022, 2:11 pm
NFT என்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் வடிவிலான கேம்கள் மற்றும் கலைப்படைப்புக்களாகும். அதனை டிஜிட்டல் வடிviல் வாங்கி சேகரிக்க முடியும். கிரிப்டோகரன்சிகளான பிட்காயின் போன்றே இவற்றையும் கிரிப்டோகரன்சி இயங்குதளங்களில் வாங்க முடியும்.
Samayam Tamil crypto


பல திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ஓவியர்கள், கலைஞர்களும் தங்களின் படைப்புகளை டிஜிட்டல் முறையில் வெளியிட்டு அதற்கான லாபத்தினையும் பெறுவர். NFTகளும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் NFTக்களை தொலைக்காட்சிகள் மூலம் வாங்கும் வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்கிறது.

அதற்கு முன் தென் கொரியாவில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் ஷோ 2022இல் ஸ்மார்ட் டிவிகள் மூலம் NFTக்களை வாங்கும் தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சாம்சங் தனது சமீபத்திய மாடல்களில் இந்த வசதிகளை இணைத்து அறிமுகப்படுத்தப் போவதாக அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது கொஞ்சம் புதுசாத்தான்யா இருக்கு - கிரிப்டோ ஹோட்டல் ரெடி!
இனி வரும் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் NFTக்களை விற்கும் விற்பனைத் தளங்களையும் ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கெனவே NFTக்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களின் NFTகளின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

கிரிப்டோகரன்சிக்கான ஆதரவு உலகெங்கும் உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாம்சங் அதன் புதிய சந்தைப்படுத்துதல் முறையை ஸ்மார்டாக கையாண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்