ஆப்நகரம்

ஒரு சேஞ்ச் வேணும்.. சிக்னல் சிஇஓ தடாலடி!

அதிக வரவேற்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும் செண்ட்ரலைஸ் தளமான வெப் 3.0 சுதந்திரமான மாற்றங்கள் தேவை என சிக்னல் சிஇஓ கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jan 2022, 10:15 pm
சமூக வலைத்தளமான சிக்னலின் சிஇஓ மோக்ஸி மார்லின்ஸ்பைக் ”வெப் 3.0” என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை இணயத்தைப் பற்றிய தனது முதல் கருத்தை வெளியிட்டுள்ளார். செண்ட்ரலைஸ்ட் தளங்களான வெப் 3.0 இல் போதுமான தொழில்நுட்ப மாற்றங்கள் இல்லை மேலும் அவை சார்பு நிலையில் செயல்படுகின்றன என விமர்சித்துள்ளார்.
Samayam Tamil file image


வெப் 3.0 செண்ட்ரலைஸ்ட் தளங்கள் தங்களின் முந்தைய இரண்டு தலைமுறைகளில் இருந்தும் வேறுபடுவதற்கான முக்கிய காரணாமே அதன் ”பரவலாக்கப்பட்ட இயல்பு ஆகும்” , ஆனால் அதனை தற்போது கட்டுப்படுத்திவரும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் நிர்வகிப்பிலிருந்து அது தன்னை சுதந்திரமாக நிலைநிறுத்திக் கொள்ளும்படி இருக்க வேண்டும் என மார்லின்ஸ்பைக் கூறியுள்ளார்.

இந்த வெப் 3.0 இன் கட்டமைப்புகள் ஒன்று பிளாக்செயின் அல்லது பியர் – டூ -பியர் சர்வர்களின் பரவலாக்கப்பட்ட நெட்வோர்களில் மூலம் செயல்படும்.சில சமயங்களின் இரண்டு கலவைகளிலும் இணைந்து செயல்படும்.அவை”டாப்ஸ்” (Dapps) என்று அழைக்கப்படும்.இதன் மூலம் கிரிப்டோகரன்சிகள் தாங்களாகவே டாப்ஸ் திட்டஙகளை உருவாக்கி அதனை நிர்வகித்தல், மேம்படுத்துதல் மற்றும் பங்களிப்பு செய்தல் போன்றவற்றில் பங்கேற்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகையையும் அளிக்கும்.

Cryptocurrency: ஒரே நாளில் 1500% உயர்ந்த ஸ்பாங்ஸ் காயின்!
மார்லின்ஸ்பைக், வெப் 3.0 ஆனது, தற்போதுள்ள கண்காணிக்கப்படும் இணையத்தின் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படக்கூடிய வகையில் டியூன் செய்யப்பட வேண்டும் என்றும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு எதிரியம் இணை நிறுவனரான விட்டாலின் பீடெரன் ’இந்த புதிய மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பமானது இரண்டிலும் சிறந்ததையே உலக மக்களுக்கு வழங்குகிறது” என பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்