ஆப்நகரம்

கிரிப்டோ கரன்சிக்கு வரி கட்டணும்... அடம் பிடிக்கும் தென் கொரியா!

கிரிப்டோ கரன்சி NFTகளுக்கு வரி வசூலிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Samayam Tamil 25 Nov 2021, 1:44 pm
தென் கொரிய நாட்டில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிரிப்டோ கரன்சியின் மற்றொரு வகையான NFTs (non-fungible tokens) டோக்கன்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான வரி விதிப்பு ஆராய்ச்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
Samayam Tamil crypto


NFTகள் என்பது கேம்கள், கலைப்படைப்புகள் மற்றும் இசை போன்ற நிஜ வாழ்க்கை பொருட்களுடன் தொடர்புடைய மெய்நிகர் சேகரிப்புகள் ஆகும். இந்த மெய்நிகர் சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்க, தற்போதுள்ள சட்டங்களில் ஒன்றைப் பயன்படுத்தப் போவதாக தென் கொரிய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தென் கொரியாவில் NFTகளுக்கான வரிகள் “மெய்நிகர் சொத்துகள்” என வரையறுக்கப்பட்டு அதன்படி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் தகவலை தென் கொரியாவின் நிதிச் சேவைகள் ஆணையத்தின் (எஃப்எஸ்சி) துணைத் தலைவர் டோ கியூ-சாங், தி கொரியா ஹெரால்ட் எனும் செய்தித்தாள் ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் கடந்த மாதம் தென் கொரியாவின் நிதியமைச்சர், ஹாங் நாம் – கி பாராளுமன்ற கிரிப்டோ கரன்சிக்கான தணிக்கை சமர்ப்பிப்பின்போது NFTகள் மெய்நிகர் சொத்துகள் என வகைப்படுத்தக் கூடாது எனக் கூறியிருந்தார்.

கிரிப்டோ கரன்சி தடை - மார்க்கெட்டில் ரத்த வெள்ளம்!
தற்சமயம் நிதிச் சேவை ஆணையத்தின் ஆணையர் கூறுவது முந்தைய கருத்துக்கு எதிராக உள்ளது. விரைவில் தென் கொரிய அரசு கிரிப்டோ கரன்சி குறித்தும் அதற்கான வரி விதிப்பு குறித்தும் தெளிவான அறிக்கை வெளியிடும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்