ஆப்நகரம்

கிரிப்டோ முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது..அரசு அதிரடி உத்தரவு!!

டெர்ரா காயினின் பெரும் சரிவிற்குப்பின் டெர்ரா டெவலப்பர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு வெளியேக் கூடாது என தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Jun 2022, 7:10 pm
தென் கொரியாவைத் தளமாகக் கொண்ட டெர்ராஃபார்ம் ஆய்வகங்களின் பல ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil WhatsApp Image 2022-06-22 at 6.50.07 PM.


கடந்த மாதம் கடுமையாகச் சரிந்து கிரிப்டோகரன்சி சந்தைகளை உலுக்கிய ஸ்டேபிள்காயின்களில் ஒன்றான டெர்ராயுஎஸ்டியின் பின்னால் உள்ள நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இப்படி ஒரு தடையை அந்நாட்டின் அரசு விதித்துள்ளது.

கடந்த மாதம் டெர்ரா யூஎஸ்டி (TerraUSD) காயின் சரிவால் பல நிறுவனங்களும், பல தொழில்துறை நபர்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கினர். TerraUSD என்பது அமெரிக்க டாலருக்கு இணையாக 1:1 என்ற விகிதத்தில் கணக்கிடப்படும்.

தென் கொரியாவின் உச்ச வழக்குரைஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர், தென் கொரியாவில் பல டெர்ராஃபார்ம் லேப்ஸ் ஊழியர்கள் அந்நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதனால் டெர்ரா யூஎஸ்டி மற்றும் டெரா காயின் பிளாக்செயின் நிறுவனத்திற்குப் பின்னால் பணியாற்றிய ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் அரசின் இவ்வுத்தரவை அடுத்து வழக்கு மேல் முறையீட்டுக்குச் செல்லும் எனவும் கூறப்படுகிறது.

அதே வேளையில் சமீபத்தில் பிட்காயினின் விலையும் 40,000 டாலரிலிருந்து படிப்படியாகச் சரிந்து இன்று 20,000 டாலருக்கு வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்