ஆப்நகரம்

ஒரே மைண்டா இருக்கணும்: கிரிப்டோ குறித்து மோடி கருத்து!

உலக பொருளாதார மன்ற உரையில் கிரிப்டோகரன்சி சவால்கள் குறித்து உலக மக்களிடையே ஒரே மாதிரியான மனநிலை வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Jan 2022, 3:55 pm
ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சி நிரலில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ”சமீப காலமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் அதிகரித்து வருகிறது. டாவோஸ் மட்டுமல்லாது இந்தியாவிற்கும் சில சாவல்களைப் பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. அந்த சிக்கல்களை கையாள அதிக பொறுப்புணர்வுகளும் தேவைப்படுகிறது.
Samayam Tamil pm modi


உலகளாவிய ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்தினை, குடும்பமாக இணைந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு உலக நிறுவனத்தின் கூட்டு முயற்சியும், ஒத்துழைப்பும் தேவை” என உரையாற்றியுள்ளார். சமீபத்திய விநியோக சங்கிலித் தடங்கல்கள், பணவீக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிரிப்டோகரன்சி உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிப்டோகரன்சிக்கு புது ரூல்ஸ் - மத்திய வங்கி அதிரடி!
”கிரிப்டோகரன்சிகள் எந்த வகையான தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது என்பதை கண்டறியவும் அதனை ஏற்க ஒரு நாடு எடுக்கும் முடிவுகள் அதனால் ஏற்படும் சவால்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது. அதனால் கிரிப்டோகரன்சி சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் மற்றும் மக்களிடையே ஒரே மாதிரியான மனநிலை இருக்க வேண்டும்” என பிரதமர் தனது கருத்தை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்