ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வ மசோதவை நிறைவேற்றிய முதல் நாடு!!

முதன் முறையாக கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமானதாக அறிவிக்கும் மசோதாவை மத்திய ஆப்பரிக்க குடியரசு நிறைவேற்றியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2022, 8:29 pm
ஏப்ரல் 25 அன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தேசிய சட்டமன்றம் கிரிப்டோகரன்சியை ஆளும் வரைவுச் சட்டத்தின் மீது வாக்களித்து அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்துடன் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
Samayam Tamil c


நிதி மற்றும் பட்ஜெட் அமைச்சர் கேலிக்சைட் நகனாங்கோ (Calixte Nganongo) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், அஞ்சல் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கோர்னா ஜிசாக்கோ (Gourna Zacko) ஆகியோரால் சட்டமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதே சமயம் பிட்காயினை சட்டப்பூர்வமான நாணயமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை நிறைவேற்றியதிற்கு இரண்டு காரணங்கள் உள்ளது என மத்திய ஆப்பரிக்க குடியரசு கூறுகிறது. அதில் ஒன்று, கிரிப்டோகரன்சி மற்றும் இந்த நாணயங்களைக் கையாளும் நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தி உருவாக்குவது (எ.கா.பரிமாற்றங்கள், கடன் மற்றும் கடன் வாங்கும் தளங்கள் போன்றவை).

இரண்டாவதாக, இந்த மசோதா மூலம், நிதித் துறைக்கு சாதகமான சூழல் உருவாக்கப்படும் என்பதால் இந்தத் துறையில் உள்ள தொழில் மற்றும் அனைத்து பொருளாதார நிறுவனங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக்குவதைக் குறித்து அனைத்து நாடுகளும் முடிவெடுக்க முடியாமல் இருக்கும்பொழுது மத்திய ஆப்பரிக்க குடியரசு அதனை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு என்ற பெறுமையை அடைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்