ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி: முக்கிய உத்தரவை வெளியிடும் அமெரிக்கா!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் கிரிப்டோகரன்சிகள் குறித்த நிர்வாக உத்தரவை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Jan 2022, 8:08 pm
வெள்ளை மாளிகையில் கிரிப்டோகரன்சிகளுக்கான நிர்வாக உத்தரவை பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடைன் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகக் குழு டிஜிட்டல் சொத்துக்கள் ஏற்படுத்தும் அபாயங்கள் மற்றும் அவற்றை சரிசெய்யும் வாய்ப்புகளை மதிப்பிடுவதற்கும் பல நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து பணியாற்றி வருவதாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் அது குறித்த அறிக்கைகள் வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியது.
Samayam Tamil Joe biden


இந்த திட்டம் குறித்து மூத்த நிர்வாக அதிகாரிகள் ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இனி வரும் வாரங்களில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அவர்கள் முன்னிலையில் அவை சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போதைய சட்டங்களின் கீழ், டிஜிட்டல் சொத்துக்களுக்கான விரிவான சட்ட கட்டமைப்பு அல்லது கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த சட்டமும் இல்லை எனவும் அவற்றை உருவாக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் உதவியை நீண்ட காலமாக கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .

Cryptocurrency: டாப் லிஸ்ட்டில் நிஞ்ஜா ப்ளோக்கி 450% அதிரடி உயர்வு!
அதனைத் தொடர்ந்து, அனைத்து ஆராய்ச்சிகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறைக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்