ஆப்நகரம்

சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிடும் வால்மார்ட்!

வால்மார்ட் நிறுவனம் அதன் சொந்த கிரிப்டோகரன்சி மற்றும் NFTகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 5:56 pm
வால்மார்ட் நிறுவனம் சில்லரை வர்த்தகத்தில் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாகும். கடந்த 2021ஆம் ஆண்டில் வால்மார்ட் அதன் கிளைகளில் பிட்காயின் மற்றும் எதிரியம் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சிகளுக்கான 200 ஏடிஎம்களை நிறுவியது. அதனைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளுக்கு எதிரான தனது சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிட அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவகத்தில் ஆவணங்களை சமர்பித்துள்ளது.
Samayam Tamil walmart


அதன் அடிப்படையில் இந்த வருடம் வால்மார்ட் அதன் சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. CNBC செய்தி ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி, 2021ஆம் ஆண்டில் உலக அளவில் அதன் டிஜிட்டல் கரன்சி மற்றும் டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கி அதனை இணைய வழியில் அதாவது ஆன்லைனின் மக்களுக்கு வழங்க ஏழு வர்த்தக முத்திரைகளை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிரிப்டோ அப்டேட்: கெத்து காட்டும் லுனா ரஷ் காயின்!
வால்மார்ட் நிறுவனம் நேரடியாக இந்த திட்டங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. மாறாக CNBC ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம். அவை எவ்வாறு வணிகத்தை பாதிக்கும் என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்