ஆப்நகரம்

வரலாற்றிலேயே முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 4 Sep 2019, 1:45 pm
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil gold price
வரலாற்றிலேயே முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!


சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின்னடைவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.

முன்னதாக சென்னையில் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டிவிட்டது.

உலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை!

அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் சென்னை வரலாற்றிலேயே இன்று முதல் முறையாக தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.30,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,765-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து, ரூ. 3922 ஆகவும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து, ரூ. 31376-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழைய தங்கத்தை விற்க சரியான நேரம்! 10%க்கு மேல் விலை அதிகம்!

இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2.60 பைசா உயர்ந்து, 55.60 ஆகவும், கிலோ ரூ.55,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் திருமண வயதில் பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு இந்த தங்கம் விலை உயர்வு, வயிற்றில் புளியை கரைத்தது போல் உள்ளது.

ஹாய் புடின்... ஹௌ ஆர் யூ? ரஷ்யாவில் சூறாவளியாய் சுழலும் பிரதமர் மோடி!

அடுத்த செய்தி

டிரெண்டிங்