ஆப்நகரம்

Gold rate: நகை வாங்க நல்ல நாள்!! உடனே கிளம்புங்க!

விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 29 Sep 2021, 11:09 am
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான விலையேற்றம் காணப்பட்ட நிலையில், நேற்று மாலையில் சிறிதளவு விலை குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலையிலும் விலைச் சரிவு நீடிக்கிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil chance to buy gold today for cheap rate chennai gold rate 29th september 2021
Gold rate: நகை வாங்க நல்ல நாள்!! உடனே கிளம்புங்க!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,350 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,353 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 34,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 24 ரூபாய் குறைந்து 34,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold Rate: தங்கத்துக்கு என்ன ஆச்சு? மேலயே போகுது!

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,717 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,714 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 37,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 24 ரூபாய் குறைந்து 37,712 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தாலிக்கு தங்கம் திட்டம்... அப்ளை பண்றது எப்படி? என்னென்ன தேவை?

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,504 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,320 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,320 ஆகவும், கேரளாவில் ரூ.4,323 ஆகவும், டெல்லியில் ரூ.4,535 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,560 ஆகவும், ஒசூரில் ரூ.4,362 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,361 ஆகவும் இருக்கிறது.

தங்கம் விலை: கண்ணீர் விட வைக்கும் விலையேற்றம்!

வெள்ளியின் விலை!

சற்று மாறாக வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தாலிக்கு தங்கம் திட்டம்... அப்ளை பண்றது எப்படி? என்னென்ன தேவை?

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்