ஆப்நகரம்

Gold rate: நகை வாங்குவோர் கண்ணீர்... தொடரும் விலையேற்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 25 Oct 2021, 10:25 am
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold price hiked today at chennai tamil nadu check latest rates here 25th october 2021
Gold rate: நகை வாங்குவோர் கண்ணீர்... தொடரும் விலையேற்றம்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (அக்டோபர் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,518 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,515 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 24 ரூபாய் உயர்ந்து 36,144 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரேஷன் கார்டு இருந்தால்தான் பணம் கிடைக்கும்... பிஎம் கிசான் புதிய அப்டேட்!

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,879 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,882 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 39,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 24 ரூபாய் உயர்ந்து 39,056 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி: தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!!

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,666 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,480 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,480 ஆகவும், கேரளாவில் ரூ.4,476 ஆகவும், டெல்லியில் ரூ.4,691 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,701 ஆகவும், ஒசூரில் ரூ.4,516 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,521 ஆகவும் இருக்கிறது.

பைக் வாங்கினால் 4000 ரூபாய் கிடைக்கும்! தீபாவளி ஆஃபர்!

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.90 ஆக இருந்தது. இன்று அது ரூ.70.30 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்ககிட்ட 2 ரூபாய் இருக்கா? 5 லட்சம் கிடைக்கும்!

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்