ஆப்நகரம்

Income Tax: மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள்!

வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளை நியமித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Jan 2021, 12:03 pm

வரி செலுத்துவோரை கவுரவிக்கவும், வரி இணக்கத்தை எளிமைப்படுத்தவும், வரி முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி, நேர்முகமாக இல்லாமல் டிஜிட்டல் முறையில் வரி மதிப்பீடு (Faceless assessment scheme), டிஜிட்டல் மேல்முறையீடு (Faceless appeal) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil வருமான வரித் துறை


இதில், டிஜிட்டல் வரி மதிப்பீடு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், டிஜிட்டல் மேல்முறையீடு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மோடியின் குட் நியூஸ்: நேர்மையாக வரி செலுத்தினால் இது கிடைக்கும்!

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், “வரி செலுத்துவோருடனா நேரடி தொடர்பை குறைக்க வரிமான வரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி வருமான வரிச் சட்டப் பிரிவு 133ஏ பொறுப்புடன் கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 119இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, வருமான வரி விசாரணை இயக்குநரகங்களிலும் (புலனாய்வுப் பிரிவு), டிடிஎஸ் ஆணையரகத்திலும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், பிரத்யேகமாக வருமான வரி அதிகாரிகளாக (Income tax authority) செயல்பட வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.

இவர்கள் சர்வே பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவர். சர்வே பணிகளுக்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் பொறுப்பு வருமான வரி விசாரணை இயக்குநரகங்களுக்கும், டிடிஎஸ் ஆணையரகங்களுக்கும் இருக்கிறது. இந்த உத்தரவு இன்று (ஆகஸ்ட் 13) முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


null

அடுத்த செய்தி

டிரெண்டிங்