ஆப்நகரம்

வருமானவரி தாக்கல் செய்ய அக்.15 வரை காலக்கெடு நீடிப்பு!

வருமானவரி தாக்கல் செய்ய அக்டோபர் 15 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2018, 6:49 pm
வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என்றிருந்த நிலையில், அக்டோபர் 15 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil income tax dept


2017-18 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 71% அதிகரித்தது.

(வருமான வரி தாக்கலின்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்!!)

முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், அவர்களுக்கு 1000ரூபாயும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரமும், அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் தாக்கல் செய்தால், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பலர் வருமானவரி தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதாக கூறப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது தெரியாததே இதற்கு காரணம்.

வருமான வரி தாக்கல்: சரிபார்க்க எளிய வழிகள்

இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதாக இருந்த கடைசி தேதி, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITR Filing: வருமான வரி தாக்கல் செய்ய அவசியமான ஆவணங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்