ஆப்நகரம்

வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு புதிய வசதி வந்தாச்சு!!

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 23 Mar 2023, 7:34 am
நீங்களும் ஒவ்வொரு வருடமும் வருமான வரித் துறைக்கு வரி செலுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். வரி செலுத்துவோருக்கு மொபைல் செயலி வசதியை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் வரி செலுத்துவோர் டிடிஎஸ் உள்ளிட்ட வருடாந்திர தகவல் அறிக்கையை (ஏஐஎஸ்) மொபைலில் பார்க்க முடியும். இதன் மூலம், வரி செலுத்துவோர் மூலத்தில் வரி விலக்கு, மூலத்தில் வரி வசூல் (டிடிஎஸ், டிசிஎஸ்), வட்டி, ஈவுத்தொகை மற்றும் பங்கு ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என்று வருமான வரித் துறைதுறை கூறுகிறது.
Samayam Tamil income tax


இலவச வசதி!

இது தவிர, வரி செலுத்துவோர் தங்களது கருத்தை தெரிவிக்கும் விருப்பத்தையும் இதில் பெறலாம். மொபைல் செயலி மூலம் வருடாந்திர தகவல் அறிக்கை, வரி செலுத்துவோர் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களை வரி செலுத்துவோர் பார்க்க முடியும். 'AIS For Taxpayer' என்பது ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஆகும். இது வருமான வரித் துறையால் இலவசமாக வழங்கப்படுகிறது. Google Play Store மற்றும் App Store இல் இது இலவசமாகவே கிடைக்கிறது.

தகவல்கள் கிடைக்கும்!


மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'AIS அல்லது TIS பற்றிய தகவல்களை வரி செலுத்துவோருக்கு வழங்குவதே இந்த செயலியின் நோக்கம் ஆகும். இது வரி செலுத்துவோர் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வழங்குகிறது. TDS/TCS, வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல்கள், வருமான வரித் திருப்பிச் செலுத்துதல், AIS/TIS இல் உள்ள பிற விஷயங்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பார்க்க வரி செலுத்துவோர் இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்.. இனி உடனடியாக கார்டு கிடைக்கும்!

இந்த மொபைல் செயலியில் காட்டப்படும் தகவல் பற்றிய கருத்தை வழங்க வரி செலுத்துபவருக்கு சிறப்பு வசதியும் உள்ளது. வருமான வரித் துறையினர் இதுகுறித்து கூறுகையில், வரி செலுத்துவோருக்கு இணங்குவதை எளிதாக்குவதற்கும், சிறந்த சேவையை வழங்குவதற்கும் இது துறையின் மற்றொரு முயற்சியாகும் என்று கூறியுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்