ஆப்நகரம்

17 கோடி பான் கார்டுகள் குப்பைத் தொட்டிக்குப் போகப்போகுதா?

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே அவகாசம் உள்ள நிலையில், சுமார் 17 ஆயிரம் பான் கார்டுகள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் பயனற்றவையாக மாறக்கூடும்.

Samayam Tamil 10 Feb 2020, 11:26 am
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே அவகாசம் உள்ள நிலையில், சுமார் 17 ஆயிரம் பான் கார்டுகள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் பயனற்றவையாக மாறக்கூடும்.
Samayam Tamil more than 17 crore pan cards could soon turn useless after march 31 2020
17 கோடி பான் கார்டுகள் குப்பைத் தொட்டிக்குப் போகப்போகுதா?


​பான் ஆதார் இணைப்பு

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் ஆதார் பான் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

​அவகாசம் நீட்டிப்பு

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, மேலும் 3 மாத அவகாசம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் மார்ச் 31ஆம் தேதி வரையில் காலக்கெடு உள்ளது.


வரிச் சலுகை பெற உதவும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

​பான் கார்டு செயலிழக்கும்!

இப்படியிருக்க, இன்னும் சுமார் 17 கோடி பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படாமல் உள்ளன என்று தெரிகிறது. 2019ஆம் ஆண்டு நிதி மசோதா மூலம் கொண்டுவரப்பட்ட திருத்ததுக்குப் பின், ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகளை செயலழிக்க வைக்கும் அதிகாரம் வருமான வரித்துறைக்குத் தரப்பட்டுள்ளது.

​அமைச்சர் அளித்த தகவல்

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், சென்ற ஜனவரி மாதம் வரை 30.75 கோடி பான் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 17.58 கோடி பான் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.


அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்வது எப்படி? பலன் என்ன?

​இணைப்பது எப்படி?

ஆன்லைன் மூலமாகவே ஆதார் கார்டு - பான் கார்டுகளை இணைக்கலாம். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் வாடிக்கையாளர்களே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண், பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

​எளிய வழி

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து UIDPAN<12 இலக்க ஆதார் எண்><10 இலக்க பான் எண்> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.


எங்கேயும் அலைய வேண்டாம்! ஆன்லைனில் உடனே பான் கார்டு பெறலாம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்