ஆப்நகரம்

கணக்கில் வராத ரூ.1,400 கோடி: வருமான வரித் துறை அதிரடி!

வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.1,400 கோடி சிக்கியுள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 8:45 pm
நாட்டில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்க அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரி செலுத்துவோரைக் கௌரவிக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேநேரம், முறையாக வரி செலுத்தாமல் மோசடி செய்வோருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்னதான் வருமான வரிச் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதைக் கடைபிடிக்காமல் மோசடி செய்யும் நிறுவனங்களும் தனிநபர்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைக் கண்டறியும் சோதனைகளில் வருமான வரித் துறை தொடர்ந்து மும்முரமாக இயங்கி வருகிறது.
Samayam Tamil it


ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தற்போது ரூ.1,400 கோடிக்கு மேல் சிக்கியுள்ளது. நகைக் கடை மற்றும் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 31 இடங்களில் ஜனவரி 21ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாகவே இந்த நிறுவனங்களில் வருமான வரி மோசடியில் ஈடுபட்டு அதற்கான ஆவணங்களையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து!

நகைக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.650 கோடி சிக்கியுள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு எந்த ஆவணங்களும் முறையாக இல்லை. அதேபோல, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கட்டுமானத் திட்டத்துக்காக ரூ.1 லட்சத்தை மட்டுமே கணக்கில் காட்டி ரூ.133 கோடி சுருட்ட முயன்றது தெரியவந்துள்ளது. வீடமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவறாகக் கணக்கு காட்டி வரி மோசடி செய்துள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த நிறுவனங்கள் பலருக்கு ரூ.19 கோடிக்கு மேல் முறையில்லாமல் கடனும் வழங்கியிருக்கின்றன.

நகைக் கடையைப் பொறுத்தவரையில், கடந்த ஏழு ஆண்டுகளாகவே தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உற்பத்தி செய்ததற்கான கணக்கு வருமான வரித் துறையிடம் காட்டப்படவில்லை. அதேபோல, பினாமி சொத்து மதிப்பு ரூ.15 கோடிக்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்