ஆப்நகரம்

ஒரே ஆண்டில் 30% லாபம்.. அந்த முதலீட்டுத் திட்டம் பற்றி தெரியுமா?

கடந்த ஓராண்டில் 30% லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்ட் பற்றி இங்குக் காணலாம்.

Samayam Tamil 24 May 2023, 6:05 pm
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்விற்குப் பிறகு கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 5.04% ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரித்து வரும் வட்டி விகிதம் பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்கு மோசமான செய்தியாக இருக்கும்.
Samayam Tamil mutual fund


ஏனெனில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவது கடினம். குறைந்த தேவை காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவதை ஒத்திவைக்கலாம். ஆனால் பல நன்மைகளும் உண்டு. அதை பின்வருமாறு காணலாம்.

1.உங்கள் முதலீட்டின் மீதான நிலையான போர்ட்ஃபோலியோவை காக்கும்.

2.டெட் ஃபண்டில் முதலீடு செய்வதால் நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறலாம்.

3.உங்களின் அவசரக்கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.

4.டெட் ஃபண்டில் நீங்கள் ஃப்க்ஸிட் டெபாசிட், வழக்கமான சேமிப்புத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிடக் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

இத்தனை நன்மைகளையும் ஒருசேர லாபத்தை அள்ளித் தந்த ஆதித்யா பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 30% லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 5 மடங்கு சராசரியாக 5.20% ஆக உயர்ந்துள்ளது. இந்த ஃபண்ட்ட் அதன் தொடக்கத்திலிருந்து 9.58% வருடாந்திர சராசரி வருவாயைக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு அதன் சராசரி வருவாயான 7% ஐ விட அதிகமான வருவாயை அளித்துள்ளது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்