ஆப்நகரம்

இந்த ஃபண்டுகள் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகளாக மாறப்போகுது!! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிவிப்பு!!

ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதன் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Mar 2022, 1:49 pm
ஆதித்யா பிர்லா சன் லைஃப் (Aditya Birla Sun Life) மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் (HDFC Mutual Fund) ஆகியவை தங்களுடைய நிலையான முதிர்வுத் திட்டங்களை (எஃப்எம்பிகள்) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதிர்ச்சிக்கு வரவிருக்கும் நிலையான டெட் ஃபண்ட் தயாரிப்புகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil mutual fund


இந்த மாற்று திட்டங்களானது ஒரு திறந்தநிலை நிலையான வருமானத் திட்டங்களில் (pen-ended fixed income schemes) ஒன்றிணைக்கும்.

மேலும் இது குறித்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் கூறியதாவது ஏப்ரல் 15 முதல் மே 23 வரை முதிர்ச்சியடையும் ரூ.4,000 கோடி மதிப்பிலான மொத்த சொத்துக்களைக் கொண்ட 17 எஃப்எம்பிகளை ஆதித்யா பிர்லா சன் லைஃப் லோ டியூரேஷன் ஃபண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் நிஃப்டி எஸ்டிஎல் வரும் ஏப்ரல் 2027 ஆண்டில் இணைப்பதாகக் கூறியுள்ளது.

அதே போல ஹெச்டிஎஃப்சி (HDFC) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதன் ஐந்து நிலையான முதிர்வு திட்டங்களை (Fixed Maturity Plans) அதன் AUM (Assets under management) கீழ் உள்ள சுமார் ரூ.1,100 கோடியை ஹெச்டிஎஃப்சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டில் (HDFC Corporate Bond fund) இணைக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளாதால் இந்திய ரிசர்வ் வங்கியும் விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி அடுத்து வரும் மாதங்களில் பாலிசிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்புள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் விலை உயர்வு பற்றி கவலைப்படுகிறார்கள்.

அதனை அறிந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனக்களான ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்டுகள் அதன் 17 திட்டங்களை கார்ப்பரேட் பாண்ட் திட்டங்களுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து முதலீட்டு ஆலோசனை நிறுவனமான கோல்பிரிட்ஜின் நிறுவனர் ரோஷ்னி நாயக் "ஏபிஎஸ்எல் நிஃப்டி எஸ்டிஎல் (ABSL Nifty SDL) ஏப்ரல் 2027 இன் இன்டெக்ஸ் ஃபண்டுடன் இணைவதற்கான விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் மெச்சூரிட்டி காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

"HDFC கார்ப்பரேட் பாண்ட் மற்றும் ABSL ஃபண்டுகள் ஆகிய இரண்டும் குறுகிய காலத்தில் நல்ல ரிட்டன் தரும் நிறுவனங்களாகும். பணப்புழக்கத் தேவைகள் இல்லாத மற்றும் குறைந்தது 1-3 ஆண்டுகள் காத்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டங்களில் இணைவது குறித்து பரிசீலிக்கலாம்" என மனி மந்த்ராவின் நிறுவனர் வைரல் பட் கருத்து தெரிவித்துள்ளார்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்