ஆப்நகரம்

Debt ஃபண்டில் முதலீடு செய்ய இது சரியான நேரமா.. முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்விற்குப் பிறகு டெட் ஃபண்டுகளில் (Debt Fund) முதலீடு செய்யலாமா என்பது குறித்து இங்குக் காணலாம்.

Samayam Tamil 10 Aug 2022, 9:05 pm
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்விற்குப் பிறகு கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 5.04% ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரித்து வரும் வட்டி விகிதம் பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்கு மோசமான செய்தியாக இருக்கும்.
Samayam Tamil Debt Fund.


ஏனெனில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவது கடினம். குறைந்த தேவை காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவதை ஒத்திவைக்கலாம். அதனால் உங்கள் முதலீடுகளில் அவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இனிக் காணலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் அதிலும் டெட் மியூச்சுவல் ஃபண்டில் (Debt Fund) குறிப்பாக நீண்ட கால டெட் ஃபண்ட் (Debt Fund) முதலீடுகளுக்கு வட்டி விகித உயர்வு எப்போதும் மோசமான செய்தியாகும்.

ஏனெனில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால் பத்திரங்களின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது கடன் திட்டங்களின் என்ஏவிகளைக் (NAV) குறைக்கிறது. எனவே, உங்கள் டெட் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ஏற்ற இறக்கமான மற்றும் குறைந்த வருமானத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். இருப்பினும், debt fund இல் முதலீடு செய்வதால் சில நன்மைகளும் உள்ளன. அதைப் பற்றி இனி காணலாம்.

டெட் ஃபண்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

1.உங்கள் முதலீட்டின் மீதான நிலையான போர்ட்ஃபோலியோவை காக்கும்.

2.டெட் ஃபண்டில் முதலீடு செய்வதால் நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறலாம்.

3.உங்களின் அவசரக்கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.

4.டெட் ஃபண்டில் நீங்கள் ஃப்க்ஸிட் டெபாசிட், வழக்கமான சேமிப்புத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிடக் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்