ஆப்நகரம்

அதளபாதாளத்தில் டெட் ஃபண்டுகள்.. குமுறும் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் டெட் ஃபண்ட் (Debt Fund) முதலீடுகள் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Samayam Tamil 28 Mar 2023, 3:42 pm
நிலையான வருமானப் பத்திரங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்டுகள் ரிசர் வங்கியின் தொடர் வங்கி வட்டி விகித உயர்த்தியதால் ரூ. 92,248 கோடி அளவுக்கு அதிகமான ஃபண்ட் வெளியேற்றத்தை கண்டுள்ளது.
Samayam Tamil Debt fund crash


இதற்கு முக்கிய காரணமாக அதிகரித்து வரும் வட்டி விகிதம் சுழற்சி, பொருட்களின் அதிகப்படியான விலைகள் மற்றும் வளர்ச்சியின் மந்தநிலை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (Association of Mutual Funds in India (Amfi) தரவுகளின் படி பிப்ரவரி மாதத்தில் டெட் ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து (Debt Fund) ரூ. 32,722 கோடி நிகர வெளியேற்றமும், மார்ச் மாதம் ரூ. 54,756 கோடியும் முதலீடுகள் வெளியேற்றம் கண்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் Debt Fund வகைகளில் மதிப்பாய்வின் கீழ் கடந்த 2 மாதத்தில் 14% நிகர வெளியேற்றங்களைக் கண்டுள்ளன. மேலும் இம்மாதம் ஒரே இரவில், திரவ மற்றும் அல்ட்ரா ஷார்ட்-டெர்ம் டியூரேசன் ஃபண்ட் (liquid and ultrashort-term duration funds )போன்ற பிரிவுகளிலிருந்து அதிக அளவில் பணமானது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு அறிவிப்புகளாலும், தொடர் பணவீக்கம் மற்றும் பங்குச் சந்தை சரிவுகள், பொருட்களின் விலையேற்றங்களும் டெட் ஃபண்டிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேற முக்கிய காரணமாக உள்ளது.

டெட் ஃபண்ட் (DEBT Fund) என்றால் என்ன?

டெட் ஃபண்டுகள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் கடன் கருவியை வாங்குவதாகும். அதாவது கருவியை வழங்கும் நிறுவனத்திற்கு கடன் கொடுப்பதாகக் கருதலாம்.

கடன் கருவிகள் என்பது கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், கருவூல பில்கள், வணிகத் தாள்கள் மற்றும் பிற பணச் சந்தை கருவிகள் போன்ற நிலையான பத்திரங்களில் டெப்ட் ஃபண்டுகள் முதலீடு செய்து அதன் மூலம் வட்டியை உருவாக்கும்.

பெரும்பாலான டெட் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான அடிப்படைக் காரணம், நிலையான வட்டி வருமானம் மற்றும் மூலதன மதிப்பை அதன் மூலம் பெறுவதேயாகும்.

கடன் கருவிகளை வழங்குபவர்கள் நீங்கள் பெறும் வட்டி விகிதத்தையும் முதிர்வு காலத்தையும் முன்கூட்டியே தீர்மானிக்கிறார்கள். எனவே, அவை 'நிலையான வருமானப் பத்திரங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

நீண்ட கால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்கள் மட்டுமே இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் டெட் ஃபண்டுகளில் ஏற்படும் குறுகிய கால ஏற்ற இறக்கத்தையும் முதலீட்டாளர்கள் புறக்கணிக்க முடியும் என மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்