ஆப்நகரம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு இதான் காரணம்! பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச விலை மதிப்பு மற்றும் விலை நிர்ணயம் தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரபு தெரிவித்துள்ளர்.

Samayam Tamil 1 Sep 2018, 4:58 pm
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச விலை மதிப்பு மற்றும் விலை நிர்ணயம் தான் காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரபு தெரிவித்துள்ளர்.
Samayam Tamil dharmendra pradan


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.81.75ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.41ஆகவும் உள்ளன.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியார்களைச் சந்தித்தார். அபபோதுஅவர் பேசியதாவது, 'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து, 71 ரூபாயைத் தொட்டுள்ளது'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்