ஆப்நகரம்

ராகேஷ் ஜுன்ஜின்வாலாவின் மறைவு எதிரொலி.. ஆகாசா விமானத்திற்கு சிக்கலா?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவு ஆகாசா ஏரி விமானத்தின் வணிகத்தை பாதிக்க வாய்ப்பில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2022, 4:52 pm
பிரபல முதலீட்டாளரும், பங்குச் சந்தை வர்த்தகரும், தொழிலதிபருமான 62வயதான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகஸ்ட் 14 அன்று காலமானார்.
Samayam Tamil rakesh jhunjhunwala


ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பங்குச் சந்தை வர்த்தகர், முதலீட்டாளர், தொழிலதிபர் என பல முகங்கள் உண்டு. இவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என அழைக்கப்படுகிறார். அண்மையில் இவரது ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வானத்தில் பறந்தது.

முதலீட்டாளராக மட்டுமல்லாமல் ஆப்டெக் லிமிட்டெட், ஹுங்கமா டிஜிட்டல் மீடியா ஆகிய நிறுவனங்களின் தலைவராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பதவி வகித்தார். மேலும் பல்வேறு இந்திய நிறுவனங்களில் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அவரின் மறைவினை அடுத்து ஆகாசா ஏர் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், மேலும் விமானப் பற்றக்குறையப் போக்க ஆகாச ஏர் நிறுவனம் பெரும் பங்கினை வகிக்கும் என்றும் அதன் முன்னாள் நிர்வாகப் பங்குதாரர் மற்றும் முதலீட்டாளருமான பெர்கிஸ் தேசாஸ்(bergis Desai) எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்