ஆப்நகரம்

ரூ.2.53 லட்சம் உணவக பங்குகளை கூடுதலாக வாங்கினார் அனுபவ முதலீட்டாளர்!. விலை எகிறியது பங்கு;

ஒரு வாரத்திற்கு முன்பு, இவர் பார்பெக்யூ நேஷனின் 2,53,004 பங்குகளை மொத்த ஒப்பந்த பரிவர்த்தனையில் வாங்கியதாக என்எஸ்இ வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Samayam Tamil 28 Apr 2022, 2:26 pm
பங்குச் சந்தையில் அனுபவமிக்க முதலீட்டாளர்களில் ஒருவரான ஆஷிஷ் கச்சோலியா பார்பெக்யூ-நேசன் ஹாஸ்பிடாலிட்டி (Barbeque-Nation Hospitality) என்ற உணவகத்தில் தனது பங்குகளை அதிகரித்துள்ளார். கடந்த ஏழு நாட்களில் அவர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது இது இரண்டாவது முறையாகும்.
Samayam Tamil ashish


ஆஷிஷ் கச்சோலியா பார்பெக்யூ நேஷனின் 2.53 லட்சம் பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.1,163 எனச் சேர்த்துள்ளார். இதன் ஒட்டுமொத்த பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.29.36 கோடி ஆகும். இதை தொடர்ந்து, பார்பெக்யூ நேஷனின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து ரூ.1208.20 ஆக இருந்தது. சில ஆதாயங்களை தாண்டி இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, ரூ.1260 க்கு வர்த்தகம் செய்தது. இந்த ஸ்கிரிப் நேற்று ரூ.1,177.10 ஆக இருந்தது.



ஒரு பங்குக்கு சராசரியாக ரூ.1,163 என்ற விலையில் பங்குகளை ஆஷிஷ் கச்சோலியா வாங்கியுள்ளார். இதனால், ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.29.42 கோடியாக உள்ளது.

2006 இல் இணைக்கப்பட்ட பார்பெக்யூ நேஷன் உணவகங்கள், இந்தியாவில் உள்ள முன்னணி கேசுவல் டைனிங் ரெஸ்டாரன்ட் சங்கிலிகளில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு உணவு சேவைகளை வழங்குகிறது.இந்நிறுவனம் இந்தியாவில் 73 நகரங்களில் 138 உணவகங்களையும், 3 நாடுகளில் 7 சர்வதேச பார்பெக்யூ நேஷன் உணவகங்களையும் கொண்டுள்ளது. இது பெங்களூரு மற்றும் சென்னையில் 10 இத்தாலிய உணவகங்களை இயக்கும் ரெட் ஆப்பிள் என்ற பிராண்டுடன் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்