ஆப்நகரம்

Tata Motors share: டாடா மோட்டார்ஸ் பங்கு.. ஒரே நாளில் 8% லாபம்!

இன்று பங்கு வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 8% உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil | 27 Jan 2023, 12:35 pm
Samayam Tamil Tata Motors
Tata Motors
முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் டிசம்பர் காலாண்டில் எதிர்பார்ப்பை தாண்டிய லாபத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜனவரி 27) பங்கு வர்த்தகத்தில் காலையிலேயே டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 8% மேல் உயர்ந்துள்ளது.

முந்தைய தினம் பங்கு வர்த்தகம் முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 419 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இன்று பங்கு வர்த்தகத்தில் ஒரே நாளில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 8% மேல் அதிகரித்து 453.40 ரூபாயை தொட்டுள்ளது.

இன்று பங்குச் சந்தை நெகட்டிவாகவே உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 1% மேல் சரிந்துள்ளன. இந்த சரிவையும் தாண்டி இன்று வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கு 8% உயர்ந்துள்ளது பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.

ஒரே நாளில் ரூ.97000 கோடி காலி.. ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நல்ல லாபம் ஈட்டியுள்ள நிலையில் பல்வேறு புரோக்கரேஜ் நிறுவனங்களும் டாடா மோட்டார்ஸ் பங்கிற்கு பாசிட்டிவ் ரேட்டிங் கொடுத்துள்ளன. சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்களை பொறுத்தவரை, ஜெஃப்ரீஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் பங்கிற்கு BUY ரேட்டிங் கொடுத்து 565 ரூபாய் டார்கெட் விலை கொடுத்துள்ளது.

மேலும் CLSA, ஜேபி மார்கன், மார்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்களும் டாடா மோட்டார்ஸ் பங்கிற்கான டார்கெட் விலையை உயர்த்தியுள்ளன. நோமுரா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் பங்கிற்கு BUY ரேட்டிங் கொடுத்துள்ளது. எனினும், டார்கெட் விலையை 508 ரூபாயாக குறைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் லாபம்

கடந்த டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3043 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது லாபத்துக்கு வழிவகை செய்துள்ளது.

முந்தைய ஆண்டு டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 1451 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. ஆனால் கடந்த டிசம்பர் காலாண்டில் 3043 கோடி ரூபாய் லாபம் அடைந்துளது. மேலும், மொத்த வருமானம் 22.5% அதிகரித்து 88,489 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

விக்னேஷ் பாபு கட்டுரையாளரை பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... Read More

அடுத்த செய்தி

டிரெண்டிங்