ஆப்நகரம்

சென்னைக்கு மாறிய தேசிய பங்குச் சந்தை.. காரணம் என்ன?

வர்த்தகத்தை சென்னைக்கு மாற்றிய தேசிய பங்குச் சந்தை.

Samayam Tamil 7 Mar 2022, 2:59 pm
இன்று பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் பங்குச் சந்தைகள் சரிந்தன. ஆனால், இந்திய முதலீட்டாளர்களுக்கோ இரட்டைத் தலைவலி உருவானது. அதாவது, தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.
Samayam Tamil NSE


இதனால் நிப்டி, பேங்க்நிப்டி உள்பட குறியீடுகளில் சரியான ட்ரெண்டை பார்க்க முடியவில்லை. ஏற்கேனவே பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேசிய பங்குச் சந்தை வர்த்தகத்தை மும்பை தலைமையகத்தில் இருந்து சென்னையில் உள்ள டிஆர்எஸ் தளத்துக்கு மாற்றியுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளை சமாளிப்பதற்காகவே சென்னைக்கு தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் மாற்றப்பட்டதாக தெரிகிறது.

Penny Stocks: 4 பங்குகள் இன்று முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கியது!...
தேசிய பங்குச் சந்தையின் DRS (Disaster Recovery Site) சென்னையில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் மும்பை தலைமையகத்தில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டாலோ, இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலோ வர்த்தகம் சென்னைக்கு மாற்றப்படும்.

இன்று பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் கூடுதல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள தளத்துக்கு வர்த்தகத்தை மாற்றியுள்ளது தேசிய பங்குச் சந்தை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்