ஆப்நகரம்

Paytm share: அசராத மார்க்கெட்.. Buyback அறிவிப்புக்கு பிறகும் சரியும் பேடிஎம் பங்கு!

பய்பேக் அறிவிப்பு வெளியான பிறகும் பேடிஎம் பங்கு விலை சரிந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 Dec 2022, 11:59 am
பேடிஎம் (Paytm) நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்ப பொதுப் பங்கு விற்பனையை தொடங்கி பங்குச் சந்தையிலும் பங்குகளை பட்டியலிட்டது. அப்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ என்ற பெயருடன் பேடிஎம் ஐபிஓ பங்கு விற்பனை நடைபெற்றது.
Samayam Tamil paytm
paytm


ஐபிஓவில் ஒரு பங்கு 2150 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நாள் முதல் பேடிஎம் பங்கு விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. பேடிஎம் நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக இருந்த ஜப்பானை சேர்ந்த சாஃப்ட்பேங்க் நிறுவனமும் தனது பங்குகளை குறைத்துக்கொண்டுள்ளது.

இதனால், அண்மையில் பேடிஎம் பங்கு விலை 440 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. பேடிஎம் பங்கு வீழ்ச்சி குறித்து பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் பங்கு பய்பேக் (Share Buyback) அறிவிப்பை வெளியிடப்போவதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டது.

மோடியுடன் நெருக்கம்.. கடன்கள் நிறைய இருந்தா என்ன? மனம் திறந்த அதானி
இதனால் பேடிஎம் பங்கு லேசாக ஏற்றம் கண்டது. இந்நிலையில், நேற்று பேடிஎம் நிறுவனம் பங்கு பய்பேக் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பங்கு பய்பேக் என்பது ஒரு நிறுவனம் தனது பங்குதாரர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வதாகும். பய்பேக் அறிவிப்பால் பங்குதாரர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் பொதுவாக சம்பந்தப்பட்ட பங்குகள் ஏற்றம் அடைவது வழக்கம்.

ஆனால், பய்பேக் அறிவிப்பு வெளியான பிறகும் பேடிஎம் பங்கு இன்று சரிந்துள்ளது. நேற்று பேடிஎம் நிறுவனம் ஒவ்வொரு பங்கும் 810 ரூபாய் விலைக்கு வாங்கிக்கொள்ளப்படும் என அறிவித்தது. மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கப்போவதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபின் பேடிஎம் பங்கு சுமார் 3% சரிந்துவிட்டது. பய்பேக் அறிவிப்பும் கூட மார்க்கெட்டை கவரவில்லை என தெரிகிறது. பேடிஎம் பய்பேக் மூலம் 1.05 கோடி பங்குகளை வங்கப்போகிறது. இதில் பேடிஎம் நிறுவனத்தின் இயக்குநர்கள், முக்கிய நிர்வாகிகள் யாரும் தங்களது பங்குகளை விற்பனை செய்யமாட்டார்கள் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்