ஆப்நகரம்

சர்பிரைஸ் கொடுத்த ஸ்பைஸ்ஜெட் பங்கு.. திடீர் ஏற்றத்துக்கு காரணம் என்ன?

இன்று பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை 8% மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 5:22 pm
அரசின் எமெர்ஜென்சி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனத்துக்கு 1000 கோடி ரூபாய் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று பங்கு வர்த்தகத்தின்போது ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை சுமார் 8% உயர்ந்தது.
Samayam Tamil spicejet


பங்கு வர்த்தகம் முடிவில் ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை 8.06% உயர்ந்து 41.55 ரூபாயாக முடிவடைந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு அரசு எமெர்ஜன்சி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் கூடுதல் கடன் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொகையை வைத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் தனது நிலுவைத்தொகையை செலுத்த முடியும். இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Aadhaar Photo Change: ஆதார் கார்டில் போட்டோ மாத்தணுமா? இதை பண்ணுங்க போதும்!
இத்தகவல் வெளியானதை தொடர்ந்து இன்று ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை 8% மேல் உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடி மட்டுமல்லாமல் ஸ்பைஸ்ஜெட் வேறு சில பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால் 50% இருக்கைகளுடன் இயங்கும்படி டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அக்டோபர் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயங்கி வருகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளால் அண்மையில் ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்