ஆப்நகரம்

இலங்கை பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தகம் ஸ்டாப்!. குறியீடுகள் 12.6% சரிவு;

ஜனவரி முதல் இலங்கை பங்குச் சந்தையில் பங்குகள் அவற்றின் மதிப்பில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்துவிட்டன. அதேவேளையில், உள்ளூர் நாணயமும் கடந்த மாதத்தில் கிரீன்பேக்கிற்கு எதிராக இதே அளவு குறைந்துள்ளது.

Samayam Tamil 25 Apr 2022, 6:40 pm
பொருளாதார நெருக்கடியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பங்குச் சந்தை இந்த மாதம் இரண்டாவது முறையாக வர்த்தகத்தை இன்று நிறுத்தியுள்ளது. இரண்டு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய நிலையில் குறியீடுகள் கிட்டத்தட்ட 13 சதவீதம் சரிந்தது.
Samayam Tamil cse


இலங்கையில், 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு அதன் மோசமான பொருளாதார வீழ்ச்சி, மாதக்கணக்கான மின்தடைகள் மற்றும் உணவு மற்றும் எரிபொருளின் கடுமையான பற்றாக்குறையுடன் போராடுகிறது.

ஜனவரி முதல் பங்குகள் அவற்றின் மதிப்பில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்துவிட்டன. அதேவேளையில், உள்ளூர் நாணயம் கடந்த மாதத்தில் கிரீன்பேக்கிற்கு எதிராக இதே அளவு குறைந்துள்ளது.

ஒரு வாரகால இலங்கை புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தகத்தின் முதல் நாள் காலையான இன்று அரசாங்கம் வட்டி விகிதங்களை உயர்த்தி அதன் $51 பில்லியன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து ஐந்து நாள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதேபோல், உள்ளூர் S&P குறியீடு வர்த்தகத்தின் ஆரம்ப நேரத்தில், நிமிடத்தில் 7% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்