ஆப்நகரம்

இன்று பங்குச் சந்தை விடுமுறை.. விஷயம் இதுதான்.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!

இந்திய பங்குச் சந்தைகளுக்கு இந்த ஆண்டின் பதினாறாவது மற்றும் கடைசி வர்த்தக விடுமுறை நாளாகும்.

Samayam Tamil 8 Nov 2022, 11:32 am
இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் எதுவும் நடைபெறாது. அதிகாரப்பூர்வ BSE இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, பிஎஸ்இ (பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) மற்றும் NSE (நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) ஆகியவற்றில் வர்த்தகம் செவ்வாய்கிழமை முழு நாளும் மூடப்பட்டிருக்கும்.
Samayam Tamil stock market


பிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பங்குச் சந்தை விடுமுறைகளின் பட்டியல் இன்று ஈக்விட்டி பிரிவு, ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவு மற்றும் எஸ்எல்பி பிரிவில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, Currency Derivatives Segment மற்றும் Interest Rate Derivatives segment பிரிவிலும் வர்த்தகம் இன்றும் நிறுத்தப்படும்.

இதற்கிடையில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வர்த்தகம் முதல் பாதியில் மூடப்பட்டிருந்தாலும், நவம்பர் 8, 2022 அன்று மாலை 5 மணி முதல் (மாலை அமர்வு) இரண்டாவது பாதியில் மீண்டும் தொடங்கும்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்த விடுமுறையானது இந்திய பங்குச் சந்தைகளுக்கு இந்த ஆண்டின் பதினாறாவது மற்றும் கடைசி வர்த்தக விடுமுறையாகும். பம்பாய் பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை ஆகியவை அதன் வழக்கமான நேரப்படி, நவம்பர் 9, 2022 புதன்கிழமை அன்று மீண்டும் தொடங்கும்.



இதற்கிடையில், தலால் ஸ்ட்ரீட் கடந்த வாரம் பெற்ற தொடரை இன்றும் தொடர்ந்து ஏற்றத்துடன் நேற்று முடிவந்தது. அதில் சென்செக்ஸ் மீண்டும் 61,000 ஐ தாண்டியது மற்றும் நிஃப்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18.2k நிலைக்கு மேல் முடிந்தது. நாளின் முடிவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 234.79 புள்ளிகள் உயர்ந்து 61,185.15 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 85.65 புள்ளிகள் உயர்ந்து 18,202.80 புள்ளிகளுடனும் முடிவு பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்