ஆப்நகரம்

நான்காம் காலாண்டில் ஜோமாட்டோ பங்குகள் உயர்வு...நீங்கள் வாங்க வேண்டுமா?

மார்ச் 2022 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஜோமாட்டோவின் Q4 ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 359.7 கோடியாக விரிவடைந்தது.

Samayam Tamil 24 May 2022, 12:08 pm
2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.359.7 கோடியாக விரிவடைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை ஆரம்ப ஒப்பந்தங்களில் ஜோமாட்டோ நிறுவனத்தின் (Zomato Ltd) இன் பங்குகள் சென்செக்ஸில் 7% மேல் உயர்ந்து ரூ.61 ஆக உயர்ந்தது. செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YoY) ரூ.692 கோடியிலிருந்து 75% அதிகரித்து ரூ.1,212 கோடியாக உள்ளது.
Samayam Tamil zomatp


காலாண்டில் மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) 6% காலாண்டு அடிப்படையில் (QoQ) 77% அதிகரித்து நான்காவது காலாண்டில் அதிகபட்சமாக ரூ.5,850 கோடியாக உயர்ந்துள்ளது.இதன்மூலம் ஜோமாட்டோ ஒரு விரைவான வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும், நீண்ட கால பங்குதாரர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இழப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.

செயல்பாட்டு அடிப்படையில், ஜோமாட்டோ 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சரிசெய்யப்பட்ட EBITDA இழப்பை ரூ.224.5 கோடியாக அறிவித்தது. இது காலாண்டு அடிப்படையில் குறைந்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பங்களிப்பு வரம்பு (GOV) நீண்ட காலத்திற்கு இரட்டை இலக்கத்தை அடைய வாய்ப்புள்ளது. சில நகரங்கள் ஏற்கனவே இந்த நிலையில் உள்ளன. ஜோமாட்டோ இன்னும் சிறந்த ஃப்ளீட் பயன்பாட்டின் மூலம் டெலிவரி செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜோமாட்டோ பங்குகளில் அதன் வாங்க மதிப்பீட்டை ரூ.100 இலக்கு விலையில் பராமரிக்க முதலீட்டாளர்களுக்கு தரகு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்