ஆப்நகரம்

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி : நிதி அமைச்சர்

2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ.150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TNN 16 Mar 2017, 3:08 pm
சென்னை : 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ.150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil one lacks youth will get skill development tranining
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி : நிதி அமைச்சர்




இன்று தமிழக சட்ட சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் , வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுகான திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டாஎ. அவர் கூறும்போது, "திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ‘தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை’ ஒரு ஒருங்கிணைப்பு முகமையாக இந்த அரசு அனுமதித்துள்ளது.


கடந்த ஆறு ஆண்டுகளில் 2.46 இலட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், 73,558 இளைஞர்கள் வேலைவாய்ப்பையும்பெற்றுள்ளனர். தகுந்த சான்றிதழ் ஏதுமில்லாத ஒரு இலட்சம் திறன் பெற்ற தொழிலாளர்களை திறனாய்வு செய்து, திறன் சான்றிதழ் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
one lacks youth will get skill development tranining

அடுத்த செய்தி

டிரெண்டிங்