ஆப்நகரம்

பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.352 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதிதுறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TNN 16 Mar 2017, 3:56 pm
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதிதுறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn govt sanction rs 352 crore to improve infrastructure in schools
பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.352 கோடி ஒதுக்கீடு



இன்று தமிழக சட்ட சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் , பள்ளிக்கல்வி துறை திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி குறித்து அவர் கூறும் போது, " வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர்வசதி, சுற்றுச்சுவர் மற்றும் சாய்வுதளங்கள், மாணவ, மாணவியருக்கான தனித்தனிக் கழிவறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்துவதற்கு அரசு சிறப்பு கவனம்செலுத்தி வருகிறது.


2016-2017 ஆம் ஆண்டில், இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 440.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கழிவறைகளில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 2016-2017 ஆம் ஆண்டில் 57.63 கோடி ரூபாய் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சி 2017-2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நபார்டு வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியையும் சேர்த்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. " என்று அவர் கூறினார்.
tn govt., sanction Rs .352 crore to improve infrastructure in schools

அடுத்த செய்தி

டிரெண்டிங்