ஆப்நகரம்

பாதுகாப்பான மின்னணுப் பரிவர்த்தனை: கூகுளுடன் கைகோர்த்தது மத்திய அரசு

பாதுகாப்பான மின்னணுப் பரிவர்த்தனைக்கு, மத்திய அரசு கூகுளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

TNN 24 Mar 2017, 11:01 am
டெல்லி: பாதுகாப்பான மின்னணுப் பரிவர்த்தனைக்கு, மத்திய அரசு கூகுளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Samayam Tamil central govt joins hands with google for digital transaction
பாதுகாப்பான மின்னணுப் பரிவர்த்தனை: கூகுளுடன் கைகோர்த்தது மத்திய அரசு


தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. இந்த வகையான பரிமாற்றத்தில் சில சமயங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதுதொடர்பான புகார்கள் பெற, சைபர் கிரைம் பிரிவுகள் தனியாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பான முறையில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரவு துணைத் தலைவர் ராஜன் ஆனந்தனும், மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சக செயலர் சுந்தரராஜனும் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் பாதுகாப்பான மின்னணு பணப்பரிமாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். இதுதொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடன் கொண்டு சேர்க்கப்படும் என்று ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Central Govt joins hands with Google for Digital transaction.

அடுத்த செய்தி