அதிமுக., கவுன்சிலர் வீட்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்!
சென்னையில் அதிமுக., கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TOI Contributor 10 May 2016, 6:53 pm
சென்னையில் அதிமுக., கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வரும் 169-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தேர்தல் அதிகாரி செந்தில்வேல் தலைமையில் அதிகாரிகள் ஜெயச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டு கட்டாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 148 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வரும் 169-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தேர்தல் அதிகாரி செந்தில்வேல் தலைமையில் அதிகாரிகள் ஜெயச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டு கட்டாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 148 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.